தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்க வேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
17.12.2013 கரூர் தமிழர்களத்தின் ஆர்ப்பாட்டம்
தமிழர்கள இளைஞர் இயக்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்றுவிழா
08.12.13,
மணப்பாறை தமிழர் களத்தின் மேற்கு மண்டலம், மணப்பாறை வட்ட இளைஞர் இயக்கம் சார்பாக வேங்கை குறிச்சியில் இளைஞர் இயக்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்று விழாவும், நடைபெற்றது. நிகழ்வில் திரு. தினேசு அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு தமிழர்களத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் திரு.அரசு தலைமை தாங்கினார். முன்னதாக தமிழர் களத்தின் பெயர் பதாகை மணப்பாறை வட்ட பொறுப்பாளர் திரு. பால் நிலவன் அவர்களால் திறந்து வைக்கபப்ட்டது. தமிழர் களத்தின் கொடியை ஊர் நாட்டாண்மை துரைசாமி அவர்கள் ஏற்றிவைத்தார். நிகழ்வில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழர் கள இளைஞர்களை வாழ்த்தி கருவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. வாகை தமிழ் முதல்வன் பேசினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கடவூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு. இரா . மாணிக்கம், அருண்மொழி வேந்தன், ஊர் தலைவர் முனியாண்டி, மற்றும் நாட்டாண்மை மணி ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்வில் வேங்கை குறிச்சி இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சு.சிலம்பரசன், சி.ராம், ஆ.குணசேகரன், சு.சிவபாலு, ரா.ராகுல்காந்தி, சு. சிவக்குமார், பிரசன்னா, சி.பண்ணை சரவணன், மணவை பெலிக்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் . நிகழ்வின் இறுதியில் திரு. பூபதி அனைவருக்கும் நன்றி கூறினார் . செய்தி ஊடகப்பிரிவு கருவூர். |
இன்று தலைவரின் 59வது பிறந்த நாள்!
26-11-2013
தாகத்தில் தவித்த தமிழினத்திற்குக் கிடைத்தத் தடாகம்தான் தலைவர்!
தமிழினம் ஆயிரமாயிரம் சறுக்கலுக்குள் சிக்கித் தவித்த போது கிடைத்த ஊன்றுகோல் அவரே!
இதிலெல்லாம் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது!
இத் தலைவன் விண்ணிலிருந்து ஒரு நாள் குதித்துக் கிளம்பிய தெய்வப் பிறவி அல்லன்!
சதையும் குருதியும் கொண்டு குழைத்து உருவான மனிதன்!
ஆனால் எச்சில் பொறுக்கும் ஏராளமான அரசியல் விற்பனர்கள் நடுவில் தமிழினம் காக்க நெருப்பாய் நின்றவன் இவன்!
இவனையும் எப்படி விற்பனைப் பொருளாக்கலாம் என்று அன்றும் இன்றும் பொறுக்கியவர்கள் உண்டு!
சமரசமில்லா சரித்திர நாயகன் இவன்!
ஆனால் நீயும் நானும் என்ன செய்தோம்?
அவனையும் விடுதலைப் புலிகளையும் தன்னந்தனியே களமாடவிட்டு வீட்டு இருக்கைகளில் அமர்ந்து “விடுதலைப் போர்” என்ற படம் பார்த்தோம்.
பூநகரியை வென்றபோது, ஆனைஇரவை வென்றபோது, வான்புலி பறந்தபோது, கடற்புலி சீறியபோது, கொழும்பு வானூர்தி நிலையம் தகர்க்கப்பட்ட போது நாம் விண் கிழிய சீட்டி அடித்தோம்!
படம் பார்த்தோம்!
காட்சிகளில் திருப்பம்!
சோகம் இழையோடியது!
யாழ் வீழ்ந்தது! பூநகரி போனது! கிளிநொச்சி தகர்ந்தது! முல்லைத் தீவு வீழ்ந்தது! முள்ளிவாய்க்கால் ......
இரு கைகளுக்குள்ளும் முகத்தைப் புதைத்து வைத்துக் கொண்டு அழுதோம்!
படம் பார்த்தோம்!
அசையவில்லை!
காண்பது படமல்ல! கண்டது பிம்பங்கள் அல்ல!
நடப்பது திரையில் அல்ல!
சதையும் எலும்பும் குருதித் துளிகளும் என் அருகே விழுந்து துடித்தபோதுதான் அதிர்ந்து துடித்து எழுந்தோம்!
ரமேசு போய்விட்டான், இசைப்பிரியா போய்விட்டாள், பாலச்சந்திரன் போய்விட்டான், ஆயிரமாயிரம் குழந்தைகள் போய்விட்டன, பெண்கள், பிள்ளைகள்...
எட்டு கோடிப் பேர் அருகில் இருந்தும் இழந்து விட்டாயேடா!
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இங்கே விற்றுக் கொண்டிருந்தார்கள். விற்பனர்கள்.
இன்னும் அவர்கள் நடமாடுகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் சீர்படாமல் ஈழம் மலராது!
வந்தேறிகளோடு சமரசம் செய்து கொண்டு அலைகிற விற்பனர்களை அடையாளம் காட்டாமல் தமிழ்நாடு சீர் அடையாது!
மாண்டவர்களை வைத்து இன்னும் வணிகம் செய்ய நினைக்கிற சாக்கடை அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் திராவிட வந்தேறிகளுக்குப் பாய்விரிக்கும் பச்சைத் துரோகிகள் இங்கே இருக்கிறார்கள்.
படம் பார்ப்பதை நிறுத்து!
களமிறங்கு!
எதிரிகளையும் துரோகிகளையும் கிழித்துக் குப்பையில் போட்டு எரிக்கக் களமிறங்கு!
வாடா வாடா தோழா!
இது வேலவனின் நாளடா!
ஒரு வேலோடு ஓடிவா!
வேலை இனி இருக்குடா!
காத்திருக்கு களமடா!
களமாட நாமடா!
நாடெல்லாம் நமதடா!
வாடா வாடா தோழா!
பொறுக்கி சிறுக்கி பாரடா!
கொன்ற கூட்டம் இதாண்டா!
போட்டு இதைத் தாக்கடா!
நாடு நமது ஆகுண்டா!
வேங்கை பிறந்த நாளடா!
வேண்டும் நமக்கு நாடடா!
நீ பிறந்த நாடடா!
நாடு நமக்கு வேணுண்டா!
வாடா வாடா தோழா!
ஆனைவெறி காட்டடா!
வேலைக் கையில் ஏந்தடா!
வாடா வாடா தோழா!
அரிமாவளவன்
தமிழர்களம்
தாகத்தில் தவித்த தமிழினத்திற்குக் கிடைத்தத் தடாகம்தான் தலைவர்!
தமிழினம் ஆயிரமாயிரம் சறுக்கலுக்குள் சிக்கித் தவித்த போது கிடைத்த ஊன்றுகோல் அவரே!
இதிலெல்லாம் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது!
இத் தலைவன் விண்ணிலிருந்து ஒரு நாள் குதித்துக் கிளம்பிய தெய்வப் பிறவி அல்லன்!
சதையும் குருதியும் கொண்டு குழைத்து உருவான மனிதன்!
ஆனால் எச்சில் பொறுக்கும் ஏராளமான அரசியல் விற்பனர்கள் நடுவில் தமிழினம் காக்க நெருப்பாய் நின்றவன் இவன்!
இவனையும் எப்படி விற்பனைப் பொருளாக்கலாம் என்று அன்றும் இன்றும் பொறுக்கியவர்கள் உண்டு!
சமரசமில்லா சரித்திர நாயகன் இவன்!
ஆனால் நீயும் நானும் என்ன செய்தோம்?
அவனையும் விடுதலைப் புலிகளையும் தன்னந்தனியே களமாடவிட்டு வீட்டு இருக்கைகளில் அமர்ந்து “விடுதலைப் போர்” என்ற படம் பார்த்தோம்.
பூநகரியை வென்றபோது, ஆனைஇரவை வென்றபோது, வான்புலி பறந்தபோது, கடற்புலி சீறியபோது, கொழும்பு வானூர்தி நிலையம் தகர்க்கப்பட்ட போது நாம் விண் கிழிய சீட்டி அடித்தோம்!
படம் பார்த்தோம்!
காட்சிகளில் திருப்பம்!
சோகம் இழையோடியது!
யாழ் வீழ்ந்தது! பூநகரி போனது! கிளிநொச்சி தகர்ந்தது! முல்லைத் தீவு வீழ்ந்தது! முள்ளிவாய்க்கால் ......
இரு கைகளுக்குள்ளும் முகத்தைப் புதைத்து வைத்துக் கொண்டு அழுதோம்!
படம் பார்த்தோம்!
அசையவில்லை!
காண்பது படமல்ல! கண்டது பிம்பங்கள் அல்ல!
நடப்பது திரையில் அல்ல!
சதையும் எலும்பும் குருதித் துளிகளும் என் அருகே விழுந்து துடித்தபோதுதான் அதிர்ந்து துடித்து எழுந்தோம்!
ரமேசு போய்விட்டான், இசைப்பிரியா போய்விட்டாள், பாலச்சந்திரன் போய்விட்டான், ஆயிரமாயிரம் குழந்தைகள் போய்விட்டன, பெண்கள், பிள்ளைகள்...
எட்டு கோடிப் பேர் அருகில் இருந்தும் இழந்து விட்டாயேடா!
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இங்கே விற்றுக் கொண்டிருந்தார்கள். விற்பனர்கள்.
இன்னும் அவர்கள் நடமாடுகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல் சீர்படாமல் ஈழம் மலராது!
வந்தேறிகளோடு சமரசம் செய்து கொண்டு அலைகிற விற்பனர்களை அடையாளம் காட்டாமல் தமிழ்நாடு சீர் அடையாது!
மாண்டவர்களை வைத்து இன்னும் வணிகம் செய்ய நினைக்கிற சாக்கடை அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் திராவிட வந்தேறிகளுக்குப் பாய்விரிக்கும் பச்சைத் துரோகிகள் இங்கே இருக்கிறார்கள்.
படம் பார்ப்பதை நிறுத்து!
களமிறங்கு!
எதிரிகளையும் துரோகிகளையும் கிழித்துக் குப்பையில் போட்டு எரிக்கக் களமிறங்கு!
வாடா வாடா தோழா!
இது வேலவனின் நாளடா!
ஒரு வேலோடு ஓடிவா!
வேலை இனி இருக்குடா!
காத்திருக்கு களமடா!
களமாட நாமடா!
நாடெல்லாம் நமதடா!
வாடா வாடா தோழா!
பொறுக்கி சிறுக்கி பாரடா!
கொன்ற கூட்டம் இதாண்டா!
போட்டு இதைத் தாக்கடா!
நாடு நமது ஆகுண்டா!
வேங்கை பிறந்த நாளடா!
வேண்டும் நமக்கு நாடடா!
நீ பிறந்த நாடடா!
நாடு நமக்கு வேணுண்டா!
வாடா வாடா தோழா!
ஆனைவெறி காட்டடா!
வேலைக் கையில் ஏந்தடா!
வாடா வாடா தோழா!
அரிமாவளவன்
தமிழர்களம்
பிரபாகரன் என்பவர் ஒருவரென்று நினைத்தாயோ ?
26-11-2013 புதுச்சேரி
மிக வேறுபாடான முறையில் தலைவர் முகப்படம் அணிந்து கொண்டு புதுச்சேரி தமிழர் களம் கட்சியினர் இன்று தலைவர் பிறந்த நாளை மக்களிடம் எடுத்துச் சென்றனர். புதுவை பேருந்து நிலையத்திலும் சுற்றியுள்ள இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களிடம் இனிப்பு வழங்கி, துண்டறிக்கை, 'வேர்கள்' இதழ் வழங்கி தலைவர் படத்தையும் அவரது உயரிய நோக்கத்தையும் எளிய மக்களிடம் பரப்பினர்.
மிக வேறுபாடான முறையில் தலைவர் முகப்படம் அணிந்து கொண்டு புதுச்சேரி தமிழர் களம் கட்சியினர் இன்று தலைவர் பிறந்த நாளை மக்களிடம் எடுத்துச் சென்றனர். புதுவை பேருந்து நிலையத்திலும் சுற்றியுள்ள இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களிடம் இனிப்பு வழங்கி, துண்டறிக்கை, 'வேர்கள்' இதழ் வழங்கி தலைவர் படத்தையும் அவரது உயரிய நோக்கத்தையும் எளிய மக்களிடம் பரப்பினர்.
பேரறிவாளன், சாந்தன், முருகனை உடனே விடுதலை
செய்க! உண்மைக் குற்றவாளிகளை கைது செய்க!!
தமிழர்களம் அரிமாவளவன் கோரிக்கை
25/11/2013
கடந்த 22 ஆண்டுகளாக ஒட்டுமொத்தத் தமிழினமும் ராஜீவ்காந்திப் படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் இவர்கள் இல்லை என்றும் சர்வதேசச் சதித்திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் என்றும் காட்டுக் கூச்சல் போட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய்விட்டது. தூக்குக் கயிறு இன்றா? நாளையா? என்ற மரண வேதனையை மூன்று தமிழர்களுக்கும் வாணாளின் இறுதிவரை சிறைக் கொட்டடியை அனுபவித்தே தீர வேண்டும் என்ற கொடுமையை நளினியும் அனுபவித்து வரும் வேளையில் வழக்கை விசாரித்து வாக்குமூலம் பதிவு
செய்த தியாகராஜன் என்ற உயரதிகாரி, நான் தவறாக பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன் என்று 22 ஆண்டுகள் கழித்து உளச்சான்று உருத்த இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் பிறகாவது கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் நீதி இந்த நாட்டில் நிலை பெற வேண்டுமென்றால் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மரண தண்டனைச் சிறையாளிகளையும் வாணாள் தண்டனை பெற்ற நளினியையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். அது மட்டும் போதாது. ராஜீவ் காந்தியைக் கொன்ற உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதையும் கண்டறிய வேண்டும். திரு. சுப்பிரமணியன்சாமி உள்ளிட்ட சிலரை கைது செய்து பக்கச் சார்பற்ற அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால் மட்டுமே உண்மை உலகிற்குத் தெரியவரும். அப்பாவிகளை உடனே விடுதலை செய்து கொலையாளிகளை உடனே கைது செய்ய தமிழர்களம் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.” என்று தனது அறிக்கையில் திரு. அரிமாவளவன் இன்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - ஊடகப்பிரிவு, கருவூர்.
கடந்த 22 ஆண்டுகளாக ஒட்டுமொத்தத் தமிழினமும் ராஜீவ்காந்திப் படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் இவர்கள் இல்லை என்றும் சர்வதேசச் சதித்திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் என்றும் காட்டுக் கூச்சல் போட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய்விட்டது. தூக்குக் கயிறு இன்றா? நாளையா? என்ற மரண வேதனையை மூன்று தமிழர்களுக்கும் வாணாளின் இறுதிவரை சிறைக் கொட்டடியை அனுபவித்தே தீர வேண்டும் என்ற கொடுமையை நளினியும் அனுபவித்து வரும் வேளையில் வழக்கை விசாரித்து வாக்குமூலம் பதிவு
செய்த தியாகராஜன் என்ற உயரதிகாரி, நான் தவறாக பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன் என்று 22 ஆண்டுகள் கழித்து உளச்சான்று உருத்த இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் பிறகாவது கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் நீதி இந்த நாட்டில் நிலை பெற வேண்டுமென்றால் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மரண தண்டனைச் சிறையாளிகளையும் வாணாள் தண்டனை பெற்ற நளினியையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். அது மட்டும் போதாது. ராஜீவ் காந்தியைக் கொன்ற உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதையும் கண்டறிய வேண்டும். திரு. சுப்பிரமணியன்சாமி உள்ளிட்ட சிலரை கைது செய்து பக்கச் சார்பற்ற அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால் மட்டுமே உண்மை உலகிற்குத் தெரியவரும். அப்பாவிகளை உடனே விடுதலை செய்து கொலையாளிகளை உடனே கைது செய்ய தமிழர்களம் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.” என்று தனது அறிக்கையில் திரு. அரிமாவளவன் இன்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - ஊடகப்பிரிவு, கருவூர்.
வள்ளுவரும் ராமசாமியும் ஒன்றா?
வள்ளுவரும் ராமசாமியும் ஒன்றா?
இருவரையும் சேர்த்து வைப்பது நன்றா?
வள்ளுவத்தை அவமதித்த ராமசாமியை
வள்ளுவருக்கு நிகராக வைப்பதா? - வள்ளுவரை
எள்ளிநகையாடிய ஈவெ.ராவை
எடுத்து வைத்து இதயத்தில் தைப்பதா?
(வள்ளுவரும் ராமசாமியும்...)
வள்ளுவத்தின் பெருமையவர் அறியார்!
வாய்க்கொழுப்பு காட்டிய அவர் சிறியார்!!
உள்ளியவை நமக்கு எதிரன்றோ - அவர்
உரைத்ததெல்லாம் நமைவீழ்த்தும் சதியன்றோ!!
(வள்ளுவரும் ராமசாமியும்...)
வள்ளுவம்தான் தமிழர்க்கு மறையாகும் - அதில்
வாய்க்கொழுப்பன் கண்டதெல்லாம் குறையாகும்.
அள்ளியது போதும் அவர் மலத்தை - இனி
அள்ள வாரீர் வள்ளுவமாம் அமுதத்தை!
(வள்ளுவரும் ராமசாமியும்...)
- நிலவரசு கண்ணன்
இருவரையும் சேர்த்து வைப்பது நன்றா?
வள்ளுவத்தை அவமதித்த ராமசாமியை
வள்ளுவருக்கு நிகராக வைப்பதா? - வள்ளுவரை
எள்ளிநகையாடிய ஈவெ.ராவை
எடுத்து வைத்து இதயத்தில் தைப்பதா?
(வள்ளுவரும் ராமசாமியும்...)
வள்ளுவத்தின் பெருமையவர் அறியார்!
வாய்க்கொழுப்பு காட்டிய அவர் சிறியார்!!
உள்ளியவை நமக்கு எதிரன்றோ - அவர்
உரைத்ததெல்லாம் நமைவீழ்த்தும் சதியன்றோ!!
(வள்ளுவரும் ராமசாமியும்...)
வள்ளுவம்தான் தமிழர்க்கு மறையாகும் - அதில்
வாய்க்கொழுப்பன் கண்டதெல்லாம் குறையாகும்.
அள்ளியது போதும் அவர் மலத்தை - இனி
அள்ள வாரீர் வள்ளுவமாம் அமுதத்தை!
(வள்ளுவரும் ராமசாமியும்...)
- நிலவரசு கண்ணன்
இதுதான் வைகோ!
இதுவரை திராவிடத்தை நம்பி நாம் கெட்டோம்.
உண்மை உள்ளடக்கத்தை மறைத்து தமிழரின் வாக்கு வங்கிக்காக நாடகமாடும் நயவஞ்சக கூட்டம்தான் திராவிடம்.
இன்றுகூட விருதுநகரிலிருந்து ஒரு நண்பர் வைகோ ஈழம் பிரச்சனையிலாவது சரியாக இறுகிறார் என்றார். முன்பு வைகோ விடுத்த ஓர் அறிக்கையை பாருங்கள். இன்னும் ம தீ மு க வில் நீங்கள் தொடர்ந்தால் தமிழினத்திற்கு நீங்கள் நண்பரா அல்லது துரோகியா என்பதை உங்கள் மனசாட்சி சொல்லும் அல்லது நாளை மக்கள் சொல்வார்கள். திராவிடத்தை விட்டு விலகுங்கள்.
உண்மை உள்ளடக்கத்தை மறைத்து தமிழரின் வாக்கு வங்கிக்காக நாடகமாடும் நயவஞ்சக கூட்டம்தான் திராவிடம்.
இன்றுகூட விருதுநகரிலிருந்து ஒரு நண்பர் வைகோ ஈழம் பிரச்சனையிலாவது சரியாக இறுகிறார் என்றார். முன்பு வைகோ விடுத்த ஓர் அறிக்கையை பாருங்கள். இன்னும் ம தீ மு க வில் நீங்கள் தொடர்ந்தால் தமிழினத்திற்கு நீங்கள் நண்பரா அல்லது துரோகியா என்பதை உங்கள் மனசாட்சி சொல்லும் அல்லது நாளை மக்கள் சொல்வார்கள். திராவிடத்தை விட்டு விலகுங்கள்.
நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி!!!
நெல்லை- 16.11.2013
தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டு தமிழர்களம் திருநெல்வேலி நகரில்
பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது. தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன்
தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால்
முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும்,
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே
முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும்,
தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில் முழக்கங்கள்
எழுப்பப்பட்டன.
பாளையங்கோட்டையில் மாணவர் போராட்டத்தில் உயிர் நீத்த லூர்து நாதனுக்கு அமைக்கப்பட்ட
சிலை அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் நெல்லை நகரின் தெருக்கள் வழியாகச் சென்று பாளை
சவகர் திடலை அடைந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
நடத்திய இப்பேரணி மிகுந்த கட்டுப்பாட்டுடனும், எழுச்சியுடனும் அமைந்தது
மட்டுமல்லாது நகரின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாவண்ணம் நடந்தது நகர மக்களைக்
கவர்ந்தது.
பெரும் எழுச்சியுடனும், மிகுந்த உணர்வுப் பெருக்குடனும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,
பெண்களும் நடத்திய இந்தப் பேரணியில் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நகரின் வீதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நிகழ்வுகளை கூடி நின்று
கவனித்தனர். ஈழ மக்களின் விடுதலை தொடர்பாகவும், ராசபக்சேவை விசாரித்துத் தூக்கிலவேண்டும்
போன்ற முழக்கங்கள் எழும்பிய போது தெருவோரங்களில் நின்றவர்களும் சேர்ந்து
முழக்கமிட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
பேரணி பொதுக்கூட்ட மைதானத்தை அடைந்தபோது தேனிசைச் செல்லப்பாவின் உணர்ச்சி மிகு
பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருந்தன. பாடல்கள் முடியும்போதெல்லாம் ஒட்டுமொத்த
மக்கள் திரளும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று எழுப்பிய முழக்கம் மாநாட்டுத் திடலே
அதிரும் வண்ணம் இருந்தது.மொத்தத்தில் தமிழர்களத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றான
தமிழ்நாட்டைத் தமிழரே ஆண்டால்தான் உலகத் தமிழரின் சிக்கல்கள் தீரும் என்ற கொள்கை
தென் தமிழகத்தில் அழுத்தமாகவே காலூன்றி இருக்கிறது என்பதற்கான பதிவாகவே
தமிழர்களத்தின் பேரணி அமைந்தது
தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டு தமிழர்களம் திருநெல்வேலி நகரில்
பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது. தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன்
தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால்
முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும்,
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே
முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும்,
தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில் முழக்கங்கள்
எழுப்பப்பட்டன.
பாளையங்கோட்டையில் மாணவர் போராட்டத்தில் உயிர் நீத்த லூர்து நாதனுக்கு அமைக்கப்பட்ட
சிலை அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் நெல்லை நகரின் தெருக்கள் வழியாகச் சென்று பாளை
சவகர் திடலை அடைந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
நடத்திய இப்பேரணி மிகுந்த கட்டுப்பாட்டுடனும், எழுச்சியுடனும் அமைந்தது
மட்டுமல்லாது நகரின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாவண்ணம் நடந்தது நகர மக்களைக்
கவர்ந்தது.
பெரும் எழுச்சியுடனும், மிகுந்த உணர்வுப் பெருக்குடனும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும்,
பெண்களும் நடத்திய இந்தப் பேரணியில் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நகரின் வீதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நிகழ்வுகளை கூடி நின்று
கவனித்தனர். ஈழ மக்களின் விடுதலை தொடர்பாகவும், ராசபக்சேவை விசாரித்துத் தூக்கிலவேண்டும்
போன்ற முழக்கங்கள் எழும்பிய போது தெருவோரங்களில் நின்றவர்களும் சேர்ந்து
முழக்கமிட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
பேரணி பொதுக்கூட்ட மைதானத்தை அடைந்தபோது தேனிசைச் செல்லப்பாவின் உணர்ச்சி மிகு
பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருந்தன. பாடல்கள் முடியும்போதெல்லாம் ஒட்டுமொத்த
மக்கள் திரளும் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று எழுப்பிய முழக்கம் மாநாட்டுத் திடலே
அதிரும் வண்ணம் இருந்தது.மொத்தத்தில் தமிழர்களத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றான
தமிழ்நாட்டைத் தமிழரே ஆண்டால்தான் உலகத் தமிழரின் சிக்கல்கள் தீரும் என்ற கொள்கை
தென் தமிழகத்தில் அழுத்தமாகவே காலூன்றி இருக்கிறது என்பதற்கான பதிவாகவே
தமிழர்களத்தின் பேரணி அமைந்தது
தமிழர் பெருவிழா - நெல்லை -2013
நெல்லை 16.11.13,
தமிழர் களத்தின் சார்பில் நெல்லை பாளையம்கோட்டை நகரில் களத்தின் பொது செயலாளர் தமிழ்த்திரு அரிமாவளவன் தலைமையில் மிக எழுச்சியான பேரணியுடன் துவங்கியது. பேரணியில் களத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். பேரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. பாளை சந்தைத் திடலில் நடைபெற்ற பொதுகூட்டத்தின் துவக்கத்தில் 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா அவர்கள் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன. அடுத்து துவங்கிய பொதுகூட்டத்தை ஆசிரியர் அல்போன்சு அவர்கள் வரவேற்று தொடர்ந்து நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்விற்கு அறிஞர் குணா, மை.பா. நன்மாறன் சுப.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடங்குளம் 'அடி வயிற்றில் அணுகுண்டு' என்ற தலைப்பில் திருமதி. இளம்பிறை அவர்களும், கச்சதீவு - 'தாய்மண்ணே வணக்கம் ' என்ற தலைப்பில் திரு. சீதையின் மைந்தன் அவர்களும், அயல்மொழிக்கல்வி - 'உச்சிமீது உருவி விழும் பட்டகத்தி' என்ற தலைப்பில் பேராசிரியர் மணி அவர்களும், ஈழம் - 'என்று தணியும் எங்கள் விடுதலை தாகம்' என்ற தலைப்பில் வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி அவர்களும், மணற்கொள்ளை -'கண்ணை விற்று ஓவியமா மண்ணை இழந்து வாழ்வோமா' என்ற தலைப்பில் திரு. பெர்லின் அவர்களும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு - சலுகைக்கு சாவுமணி உரிமைக்கே போடுவழி ' என்ற தலைப்பில் திரு. ஞானபிரகாசம் அடிகளார் அவர்களும் உரையாற்றினார்கள். |
தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!
"தனிநாடு கேட்டுப் போராடிய
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்!
தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்!
நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள். மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்!
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள். ஒன்றை தில்லி வெட்டும்! மற்றொன்றை திராவிடம் வெட்டும்! தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால் திருட்டுத் திராவிடம்
வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்! காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வரிந்து கட்டி கருணாநிதி ஆடும் ஆட்டம், பச்சையான பித்தலாட்டம்! தில்லி காங்கிரசு சொல்லிக் கொடுத்து கருணாநிதி ஆவேச நடனம் ஆடுகிறார். நீ போனால் என்ன? போய்த் தொலையாமல் இருந்தால் என்ன? கொலைகாரனுக்கு
என்ன தண்டனை? என்பது பற்றி மட்டும் பேசு! ஆடுகளையும் நரிகளையும் ஒரு பட்டியில் எப்படியடா அடைப்பாய்?
கொலையுண்ட மக்களின் பிறங்கடைகளும் கொலைவெறித் தாண்டவம்
ஆடியவனும் ஒரு வீட்டுக்குள் எப்படியடா குடும்பம் நடத்தச் சொல்லுகிறாய்?
தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!
அதற்காகத்தான் எங்கள்
மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன!
தமிழர் களம்
தமிழர் நாடு"
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்!
தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்!
நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள். மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்!
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள். ஒன்றை தில்லி வெட்டும்! மற்றொன்றை திராவிடம் வெட்டும்! தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால் திருட்டுத் திராவிடம்
வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்! காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வரிந்து கட்டி கருணாநிதி ஆடும் ஆட்டம், பச்சையான பித்தலாட்டம்! தில்லி காங்கிரசு சொல்லிக் கொடுத்து கருணாநிதி ஆவேச நடனம் ஆடுகிறார். நீ போனால் என்ன? போய்த் தொலையாமல் இருந்தால் என்ன? கொலைகாரனுக்கு
என்ன தண்டனை? என்பது பற்றி மட்டும் பேசு! ஆடுகளையும் நரிகளையும் ஒரு பட்டியில் எப்படியடா அடைப்பாய்?
கொலையுண்ட மக்களின் பிறங்கடைகளும் கொலைவெறித் தாண்டவம்
ஆடியவனும் ஒரு வீட்டுக்குள் எப்படியடா குடும்பம் நடத்தச் சொல்லுகிறாய்?
தமிழனுக்குத் தனிநாடுதான் தீர்வு!
அதற்காகத்தான் எங்கள்
மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன!
தமிழர் களம்
தமிழர் நாடு"
தமிழா, ஏமாறாதே!
"இன்றைய நாளேடுகளில் இந்திய அரசு ஒரு முழுப்பக்க
விளம்பரத்தைக் கொடுத்துள்ளது, “இலங்கையில் இந்தியா ஆற்றும் பணிகளை” படங்களோடு போட்டிருக்கிறார்கள்.
முடமான ஒருவருக்கு செயற்கைக் கால்கள் வழங்குவதும் அப்படங்களுள் ஒன்று! புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பது மற்றொரு படம். இப்படிச் சில அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன. ஏன் முடமானார்கள்? ஏன் வீடிழந்தார்கள்?
ஏன் நிலங்களையும் வசதிகளையும் இழந்தார்கள்? நிவாரணம் பற்றிப் பேசும் இந்தியா நடந்தது என்ன என்று ஏன் பேச மறுக்கிறது? இலங்கை அரசுப் படைகள்தான் ஊனமாக்கின, நாசமாக்கின என்றால் இந்தியா ஏன் போய் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது? நாசமாக்கியதிலும் ஊனமாக்கியதிலும் ஏதோ தொடர்பு இருப்பது போலவே
இந்தியா நடந்து கொள்கிறது! ஊனமுற்றவனுக்குச் செயற்கைக் கால் கொடுக்கிறது! வீடிழந்தவருக்கு வீடு கட்டிக் கொடுக்கிறது? கற்பிழந்த எம் பெண்களுக்கு கற்பைத் திரும்பத் தருவார்களா? உயிரிழந்த எம் மக்களுக்கு உயிரைத் திரும்பத் தருவார்களா? நீ உடைத்த ஈழத்தை திரும்பத் தருவாயா?
இனியும் இப்படி நடக்கக் கூடாது என்றால், நமக்கு நிவாரணம் தேவை இல்லை! தாக்கியவனுக்குத் தண்டனை வேண்டும். தாங்கியவனுக்கு பாதுகாப்பு வேண்டும். தாக்கிய இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்! அப்படியானால்தான் மீண்டும் ஒரு முறை இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் அவர்கள் இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கும் அது பாடம்! அதை மட்டுமே நம்பி எஞ்சியிருக்கும் பெண்களையும் மக்களையும் காணிகளையும் சிங்களரிடம் கையளித்துவிட முடியாது. எனவே, நமக்கு நிலையான பாதுகாப்பு என்பது தனி ஈழமே!
கருணாநிதியும் செயலலிதாவும் வைகோவும் அவர்போன்றோரும் இப்போது ஏதோ புரட்சி வேடம் கட்டி நாடகம் ஆடுவதை நம்பத் தொடங்கிவிடாதீர்கள். “இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து
கொள்ளக்கூடாது” என்கிற கோரிக்கை தமிழர்களின் முதன்மையான கோரிக்கையான, “இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணையும் நடவடிக்கையும் தேவை” என்ற நிலையிலிருந்து இவர்கள் நம்மை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராசபக்சேவைத் தப்ப வைக்க இந்தியா முன்னெடுத்துக் கொடுத்திருக்கிற ஒரு நடவடிக்கை. இதில் இந்தியா கலந்து கொள்வது அல்லது கூடாது என்கிற உப்புச் சப்பற்ற கோரிக்கை ஒரு திசை திருப்பல் நாடகம் தில்லி பெரிய நாடகம் ஆடுகிறது. தமிழ்நாட்டுத் திராவிடங்கள் இந்தியாவோடு சேர்ந்துகொண்டு கொடுத்த பாத்திரத்தைப் பத்திரமாக நடிக்கின்றன! தமிழா, ஏமாறாதே!
தமிழர்களம்
தமிழர்நாடு!"
விளம்பரத்தைக் கொடுத்துள்ளது, “இலங்கையில் இந்தியா ஆற்றும் பணிகளை” படங்களோடு போட்டிருக்கிறார்கள்.
முடமான ஒருவருக்கு செயற்கைக் கால்கள் வழங்குவதும் அப்படங்களுள் ஒன்று! புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பது மற்றொரு படம். இப்படிச் சில அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன. ஏன் முடமானார்கள்? ஏன் வீடிழந்தார்கள்?
ஏன் நிலங்களையும் வசதிகளையும் இழந்தார்கள்? நிவாரணம் பற்றிப் பேசும் இந்தியா நடந்தது என்ன என்று ஏன் பேச மறுக்கிறது? இலங்கை அரசுப் படைகள்தான் ஊனமாக்கின, நாசமாக்கின என்றால் இந்தியா ஏன் போய் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது? நாசமாக்கியதிலும் ஊனமாக்கியதிலும் ஏதோ தொடர்பு இருப்பது போலவே
இந்தியா நடந்து கொள்கிறது! ஊனமுற்றவனுக்குச் செயற்கைக் கால் கொடுக்கிறது! வீடிழந்தவருக்கு வீடு கட்டிக் கொடுக்கிறது? கற்பிழந்த எம் பெண்களுக்கு கற்பைத் திரும்பத் தருவார்களா? உயிரிழந்த எம் மக்களுக்கு உயிரைத் திரும்பத் தருவார்களா? நீ உடைத்த ஈழத்தை திரும்பத் தருவாயா?
இனியும் இப்படி நடக்கக் கூடாது என்றால், நமக்கு நிவாரணம் தேவை இல்லை! தாக்கியவனுக்குத் தண்டனை வேண்டும். தாங்கியவனுக்கு பாதுகாப்பு வேண்டும். தாக்கிய இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்! அப்படியானால்தான் மீண்டும் ஒரு முறை இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் அவர்கள் இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கும் அது பாடம்! அதை மட்டுமே நம்பி எஞ்சியிருக்கும் பெண்களையும் மக்களையும் காணிகளையும் சிங்களரிடம் கையளித்துவிட முடியாது. எனவே, நமக்கு நிலையான பாதுகாப்பு என்பது தனி ஈழமே!
கருணாநிதியும் செயலலிதாவும் வைகோவும் அவர்போன்றோரும் இப்போது ஏதோ புரட்சி வேடம் கட்டி நாடகம் ஆடுவதை நம்பத் தொடங்கிவிடாதீர்கள். “இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து
கொள்ளக்கூடாது” என்கிற கோரிக்கை தமிழர்களின் முதன்மையான கோரிக்கையான, “இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணையும் நடவடிக்கையும் தேவை” என்ற நிலையிலிருந்து இவர்கள் நம்மை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராசபக்சேவைத் தப்ப வைக்க இந்தியா முன்னெடுத்துக் கொடுத்திருக்கிற ஒரு நடவடிக்கை. இதில் இந்தியா கலந்து கொள்வது அல்லது கூடாது என்கிற உப்புச் சப்பற்ற கோரிக்கை ஒரு திசை திருப்பல் நாடகம் தில்லி பெரிய நாடகம் ஆடுகிறது. தமிழ்நாட்டுத் திராவிடங்கள் இந்தியாவோடு சேர்ந்துகொண்டு கொடுத்த பாத்திரத்தைப் பத்திரமாக நடிக்கின்றன! தமிழா, ஏமாறாதே!
தமிழர்களம்
தமிழர்நாடு!"
கலைஞர்......
கலைஞர்
தமிழினத் தலைவர், திராவிடர்களின் தலைமகன், கலைத்தாய் பெற்றெடுத்த கலைமகன், முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர்......
தன்னலம் கருதாத இந்த தமிழர் தலைவருக்கு பொதுநலமே உயிர்மூச்சு. கல்லிலே கட்டி கடலிலே போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து கடமையாற்றுவாரே தவிர கபடவேசதாரியல்ல. வார்த்தைகளால் அலங்கரித்துப்பேசும் வல்லமை பெற்றவர். வாய்மை காப்பாற்றியவர். கண்ணகியை மீட்டவர், குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்தவர். காலஅமல்லாம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் மட்டுமே வாழும் இவரின் தாராள குணம் யாருக்கு வரும்.
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்து ஆளாக்கி அனைவருக்குமாய் பாடுபட இன்றும் வாழ்கிறார் பெருந்தலைவர் கலைஞர். தமிழனுக்கு ஒரு கேடு என்றால் துடித்தே போய்விடுவார். தன்மானத் தலைவர் இவர் தரணியெங்கும் புகழ் பெற்றவர். எத்தனை சொந்தங்கள், எவ்வளவு சொத்துக்கள் அள்ள அள்ள குறையாது அள்ளித்தரும் வள்ளல் இவரே வாழும் வள்ளுவர்.
இன்னும் எவ்வளவோ சொல்லி இவரை வாயார வாழ்த்த வயதில்லாமல் வணங்கித் தாங்கும் அன்பு உடன் பிறப்புகள். முரசொலியில் கடிதம் எழுதியே உடன்பிறப்புகளை உசுப்பேற்றும் மாயக்காரர். கனிமொழியின் கவிதை வரிகளில் கனவுகாணும் கழகத்தின் ஆணிவேர். எவ்வளவோ நல்லவைகள் எண்ணிலடங்கா காரியங்கள் எப்போதும் உற்சாகத்துடன் “குருவி”யையும் பார்க்கும் குறும்புக்காரர் இவரோ சினிமாவுக்கு தலைப்பிள்ளை, கவிதைக்கு மட்டும் என்றும் மாப்பிள்ளை. இன்னும் இருக்கு எவ்வளவோ....
இதைச்சொல்ல மறந்துட்டோமே....... ஆம் காவிரிக்காக கெஞ்சிடுவார். ஒகேனக்கலை விட்டுக்கொடுப்பார். பவானி, முல்லைப்பெரியாறு இப்போ கண்ணகி கோயில் என தமிழர்களின் அடையாளங்களை அழிக்கத்துடிக்கும் அண்டை மாநில விசமிகளை அன்போடு அரவணைத்து இந்திய இறையாண்மையை காத்திடுவார். சனநாயகம் பேசிடுவார். உலக அமைதியே இங்கிருந்துதான் என்பதுபோல தமிழர்களை தாலாட்டி உறங்கவைக்க இலவசங்களை அள்ளித்தருவார். இல்லாமை இருள்போக்க ஆயிரம் கோயிலுக்கு கும்பாபிசேகம் நடத்திடுவார். தங்கத்தேரும் தந்திடுவார் பகுத்தறிவுப் பாசறைத்தலைவர். இளிச்சவாயன் தமிழன்தானே.
ஏதோ உளறிட்டேன் .... டாஸ்மாக்கில் ஊத்திக் கெட்டேனே. நாளைக்கு மீட்டிங்கு தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுவார் கழக உடன்பிறப்புகள் தவறாது கலந்து கொள்வோம்! கோசங்கள் முழங்குவோம். கொள்கையை உதறுவோம். தமிழர் தலைவா நீ வாழி... இந்திய இறையாண்மை வாழி.....
எல்லாம் உலகமயம் தாராள மயம் தனியார் மயம் என பன்னாட்டு நிறுவனங்கள் பலஇங்கு வந்தாச்சு. டாலரில் சம்பாதிக்கலாம். கோடீசுவரனாய் வாழலாம். இப்போதைக்கு டாஸ்மாக்கில் கொஞ்சம் ஊத்திக்கலாம். 2020ல் இந்தியா வல்லரசு! தமிழ்நாடு யாருக்கு?......
- கருவைமுருகு
09.05.2008
கரூர்.
தமிழினத் தலைவர், திராவிடர்களின் தலைமகன், கலைத்தாய் பெற்றெடுத்த கலைமகன், முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர்......
தன்னலம் கருதாத இந்த தமிழர் தலைவருக்கு பொதுநலமே உயிர்மூச்சு. கல்லிலே கட்டி கடலிலே போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து கடமையாற்றுவாரே தவிர கபடவேசதாரியல்ல. வார்த்தைகளால் அலங்கரித்துப்பேசும் வல்லமை பெற்றவர். வாய்மை காப்பாற்றியவர். கண்ணகியை மீட்டவர், குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்தவர். காலஅமல்லாம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் மட்டுமே வாழும் இவரின் தாராள குணம் யாருக்கு வரும்.
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்து ஆளாக்கி அனைவருக்குமாய் பாடுபட இன்றும் வாழ்கிறார் பெருந்தலைவர் கலைஞர். தமிழனுக்கு ஒரு கேடு என்றால் துடித்தே போய்விடுவார். தன்மானத் தலைவர் இவர் தரணியெங்கும் புகழ் பெற்றவர். எத்தனை சொந்தங்கள், எவ்வளவு சொத்துக்கள் அள்ள அள்ள குறையாது அள்ளித்தரும் வள்ளல் இவரே வாழும் வள்ளுவர்.
இன்னும் எவ்வளவோ சொல்லி இவரை வாயார வாழ்த்த வயதில்லாமல் வணங்கித் தாங்கும் அன்பு உடன் பிறப்புகள். முரசொலியில் கடிதம் எழுதியே உடன்பிறப்புகளை உசுப்பேற்றும் மாயக்காரர். கனிமொழியின் கவிதை வரிகளில் கனவுகாணும் கழகத்தின் ஆணிவேர். எவ்வளவோ நல்லவைகள் எண்ணிலடங்கா காரியங்கள் எப்போதும் உற்சாகத்துடன் “குருவி”யையும் பார்க்கும் குறும்புக்காரர் இவரோ சினிமாவுக்கு தலைப்பிள்ளை, கவிதைக்கு மட்டும் என்றும் மாப்பிள்ளை. இன்னும் இருக்கு எவ்வளவோ....
இதைச்சொல்ல மறந்துட்டோமே....... ஆம் காவிரிக்காக கெஞ்சிடுவார். ஒகேனக்கலை விட்டுக்கொடுப்பார். பவானி, முல்லைப்பெரியாறு இப்போ கண்ணகி கோயில் என தமிழர்களின் அடையாளங்களை அழிக்கத்துடிக்கும் அண்டை மாநில விசமிகளை அன்போடு அரவணைத்து இந்திய இறையாண்மையை காத்திடுவார். சனநாயகம் பேசிடுவார். உலக அமைதியே இங்கிருந்துதான் என்பதுபோல தமிழர்களை தாலாட்டி உறங்கவைக்க இலவசங்களை அள்ளித்தருவார். இல்லாமை இருள்போக்க ஆயிரம் கோயிலுக்கு கும்பாபிசேகம் நடத்திடுவார். தங்கத்தேரும் தந்திடுவார் பகுத்தறிவுப் பாசறைத்தலைவர். இளிச்சவாயன் தமிழன்தானே.
ஏதோ உளறிட்டேன் .... டாஸ்மாக்கில் ஊத்திக் கெட்டேனே. நாளைக்கு மீட்டிங்கு தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுவார் கழக உடன்பிறப்புகள் தவறாது கலந்து கொள்வோம்! கோசங்கள் முழங்குவோம். கொள்கையை உதறுவோம். தமிழர் தலைவா நீ வாழி... இந்திய இறையாண்மை வாழி.....
எல்லாம் உலகமயம் தாராள மயம் தனியார் மயம் என பன்னாட்டு நிறுவனங்கள் பலஇங்கு வந்தாச்சு. டாலரில் சம்பாதிக்கலாம். கோடீசுவரனாய் வாழலாம். இப்போதைக்கு டாஸ்மாக்கில் கொஞ்சம் ஊத்திக்கலாம். 2020ல் இந்தியா வல்லரசு! தமிழ்நாடு யாருக்கு?......
- கருவைமுருகு
09.05.2008
கரூர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை. (பாவாணர்)
மனித உள்ளத்தைப் புனிதப் படுத்தும் பக்தி இலக்கியம் நிறைந்ததொரு மொழி தமிழாகும். - (தனிநாயக அடிகள்)
யாமறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். - (மகாகவி பாரதி)
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் முன் உதிரத்து உதிதெழுந்து ஒன்று பலவாயின்.
(பேராசிரியர் சுந்தரம் பிள்ளை)
தமிழ்மொழியில் காணும் அகப் பாடல்கள் உலகில் வேறெந்த மொழிகளிலும் இல்லை -(அறிஞர் பெசுகி / அறிஞர் போப்)
எந்த நாட்டவரும் பெருமை கொள்ள வேண்டிய இலக்கியம் தமிழ் இலக்கியமே - (எவ். கெல்லட்)
தமிழுக்கும் அமுதென்றுப் பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். -(பாரதிதாசன்)
தமிழை சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன் -(நந்திவர்ம மன்னன்)
மனித உள்ளத்தைப் புனிதப் படுத்தும் பக்தி இலக்கியம் நிறைந்ததொரு மொழி தமிழாகும். - (தனிநாயக அடிகள்)
யாமறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். - (மகாகவி பாரதி)
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் முன் உதிரத்து உதிதெழுந்து ஒன்று பலவாயின்.
(பேராசிரியர் சுந்தரம் பிள்ளை)
தமிழ்மொழியில் காணும் அகப் பாடல்கள் உலகில் வேறெந்த மொழிகளிலும் இல்லை -(அறிஞர் பெசுகி / அறிஞர் போப்)
எந்த நாட்டவரும் பெருமை கொள்ள வேண்டிய இலக்கியம் தமிழ் இலக்கியமே - (எவ். கெல்லட்)
தமிழுக்கும் அமுதென்றுப் பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். -(பாரதிதாசன்)
தமிழை சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன் -(நந்திவர்ம மன்னன்)